புல்லாங்குழலின் சிரிப்பு
நதிகளை போலவே
என் கவிதைளும்
நம் காதலை
எழுத எழுத
புதிதாகின்றன
பூக்களையும்
பறவைகளையும் அதிகம்
புகைப்படம் எடுக்கிறேன்
உன்னைப் பற்றி
கவி எழுத
என் இதயம் நீ என்பதால்
உன்னைப் பற்றி
கவி எழுதும் போது - என்
நாடிகளும் நாளங்களும்
சற்று ஓய்வெடுக்கின்றன
புதிர்ப் பாதையூடாக
பயணிக்கிறேன்
உன் இதயத்தை
நெருங்கும் பாதையை
அறியாது
உன்னைப் பற்றி
எழுதிய கவிதைகளை படி
நான் கண்ட
கனவுகளை
நீயும் காண்பாய்
வளையாத மூங்கிலில்
துளையிட்ட பின்
புல்லாங் குழல்கள்
வேதனை மறந்து சிரிக்கின்றன
என்னைப் போல்
ஏ. எச். எம். றிழ்வான்