13.4.15

நீயும் என் நினைவுகளும் ....

நீயும் என் நினைவுகளும் ....

விழிகள் எனும்
உளிகள் கொண்டு உன்னை
செதுக்கியதால்-என்
இதயமும் ஒரு
சித்திரக்குன்றம் தான்

தாள் தாளாய் எழுதி
நூல் நூலாய் கோர்த்து
யாழ் தேவியின் பெட்டிகள் போல்
அடுக்கி வைத்திருக்கின்றேன்
உன்னைப் பற்றி எழுதிய -என்
கவிதைப் புத்தகங்களை

அடிக்கடி உன் நினைவுகள்
புதுப்பிக்கப்படுகின்றன
துறை முகங்களில்
தங்கிச் செல்லும்
கப்பல்கள் போல்

நீ பிரிந்த பின்பு
வரட்சியால்
வெடித்துப் பிளவுற்ற
பூமி போலவே இருக்கிறது
என் இதயம்
மீண்டும் இணைய முடியாமல்


காணாமல் போனவிமானத்தின்
கறுப்புப்பெட்டி போல்
பரிசோதிக்கிறேன்
என் இதயத்தை
நீ என்னை விட்டுச்செல்ல
காரணம் என்னவென்று

வேரினூடே நீர் உறிஞ்சும்
தென்னை போல
எட்டா உயரத்தில் நீயும்
உன்னில் என் நினைவுகளும்

ஏ. எச். எம். றிழ்வான்

உன் மௌனம் ....

உன் மௌனம் ....

துடிக்கும் இதயத்தில் இடம் 
பிடித்தவளுக்காய் தமிழை 
வடித்து எழுதிய 
என் கவிதை 

குளிர் காலத் 
தளிர் மேலே
வெளிர் பனி உன்
முகப்பருக்கள் 

நெஞ்சம் கவர்ந்த
மஞ்சல் முகத்தில்
அஞ்சல் பெட்டி நிற 
உதடுகள் 

சத்தம் இன்றி
சுத்தித் திரியும் 
நத்தையாய் உன் 
பாதங்கள் 

அன்ன நிறத்து 
கன்னத்திலே வண்டு
வண்ண 
மச்சம் 

கரும்பை தேடும்
எறும்பாய் நான் 
விரும்பும் உன்னை 
நோக்கிய என் பார்வைகள் 

நேசிக்கும் உன் 
சுவாசத்தை 
யாசிக்கும் என்னை
தண்டிக்கும் உன் மௌனம்

ஏ. எச். எம். றிழ்வான்

கண்ணீர்த் துளியானேன் ....

கண்ணீர்த் துளியானேன் ....

என்
சோகங்களை 
சுகங்களாக்கிய – நீ
இன்று 
நிஜங்களை 
நிழல்களாக்கியது ஏன்?


நீ 
என்னைப் பிரிந்த பின் 
தூக்கத்தையே அதிகம் விரும்புகிறேன் 
கனவிலாவது உன்னோடு
இனிமையாக 
வாழ வேண்டும் என்பதற்காய் 


என் 
தூய காதலை
புரிந்து கொண்டது
கண்கள் மட்டும் தான் 
பிரிந்த பின்பும்
அழுது கொண்டே இருக்கிறது


அருகருகே இருந்தும் 
தண்டவாளங்கள் கூட
காதலிக்க மறுக்கின்றன
ஒவ்வொரு நாளும் 
தன்மேல் இறந்து கிடக்கும்
காதலர்களைப் பார்த்து 


நிசப்த இரவுகளில் 
சந்திரன் பனிப்பூக்களைத் தூவ
கடற்கரையோர மெத்தையிலே
சாய்ந்திருந்து காதலித்த 
அந்த நாட்கள் 
நீங்காத நினைவுகளாய்


காதலிக்க முன்
தண்ணீர்த் துளியாய் இருந்த நான்
உன்னைக் காதலித்த பின் 
பன்னீர்த் துளியானேன் 
இன்று நீயோ என்னைப் பிரிய நான்
கண்ணீர்த் துளியானேன் 


V. vr;. vk;. wpo;thd;

என் உயிரே...!

என் உயிரே...!
மெல் இதழ்களும்
மெழுகுக் கன்னங்களும்
மைதீட்டிய கண்ணின்
மயக்கும் பார்வைகளும் - தாக்குதடி

வெட்கச் சிரிப்பு

வெகுளித் தனம்
வெள்ளித் தோடிட்ட காதுகள்
வெண் பற்கள் - ஈர்க்குதடி

எழில் கூந்தல்

எரிக்கும் கோபம்
எட்டா நிலா அழகு
எழில் முகம் - பிடிக்குதடி

விண் மீன் விழிகள்

விண் மழைமேக புருவம்
மரகதக் கையின்
மருதாணிச் சிவப்பு - மயக்குதடி

இளஞ் சிவப்பு

இதழ்களில்
இனிமையாக முத்தமிட
இதயம் மெல்லத் - துடிக்குதடி

கனவுகளைத் தந்துவிட்டு

களைந்து சென்றாயடி - என்
கற்பனைகள் சிறகொடிந்து
கண்ணீர் உற்றாய் - சிந்துதடி
ஏ. எச். எம். றிழ்வான்

என்னவளே ...

என்னவளே ...

உன் பிஞ்சுப் பாதங்களில்
பஞ்சு விரல்கள்
உன் பிஞ்சு மேனியின்
பஞ்ச வர்ணங்கள்

உன் பிஞ்சு இதழின் விசமற்ற
நஞ்சுத் துளிகள்
உன் பிஞ்சுக் கூந்தலின்
வஞ்சிக்கொடிகள்

உன் பிஞ்சுக் கன்னங்களில் - நான்
கொஞ்சும் சில நொடிகள்
உன்னை மெல்ல நெருங்கும் போது
தூரப் போகும் சிட்டுக்குருவிக்
கொளுசொலிக் கால்கள்
விட்டு விலகும் போது
என்னைத் தேடிச் சுழலும்
உன் இரு விழிகள்

பார்க்க மாட்டாயோ என ஏங்குகையில்
தலையில் யாரோ குற்றியது போல்
கடைசி நொடியில் பார்க்கும்
குளிர்ந்த, வளைந்த வானவில் போன்ற
புருவம் தூக்கி
எனைப் பார்க்கும் பார்வை


என் கண்களாகிய
ஜன்னல் ஊடாய் நுழைந்து
என் இதய அரை
கதவு திறந்து அனுமதியின்றி
உள்ளே செல்வதால்
நான் சில நொடிகள்
மௌனித்து எனை மறந்து
கனவுலகில் மிதந்து போகிறேன்
உயிரான என்னவளே...

ஏ.எச்.எம் றிழ்வான்

காத்திருந்தாலே காதல் சுகம் ...



காத்திருந்தாலே காதல் சுகம் ...

எம் காதல்
பூப்போல்
பூத்தது
புன்னகையோடு

சிட்டாய்
சிறகடிக்கிறது – என் மனத்தில்
சில்மிஷக்காரி – உன்
சிரிப்பு

உன்
நினைவுகளால்
நீடிக்கிறது 
நித்தம் என் ஆயுள்

முடித்துவைத்து – உன்
முத்தங்கள்
மொத்தம் வேண்டும்
எனக்கு

என் இதயம்
வேகமாய் துடிக்கிறது
உன் நினைவுகள் தந்த
அதிர்வுகளால்

நான் தேடும் போதெல்லாம்
ஓடி வருகிறாய் - நீ
என் நீடித்த
துயர் நீக்க

தீக்குச்சியாய் - நீ
தீண்டும் போது
தீப்பிடிக்குதடி
என் மேனி

குழந்தையாய் - உன்
குறும்புகள்
குடிகொண்டன யாவும்
என் நெஞ்சில்

காத்திருந்தால் தான்
காதல் சுகம்
காத்திருப்போம் நாம்
கைப்பிடிக்கும் காலம் வரை

@ ஏ.எச்.எம் றிழ்வான்