15.4.15

உன்னுள் என் காதல்

உன்னுள் என் காதல்

வாடகை
செலுத்தாமலே
குடியிருக்கிறாய்
நீ
என் இதயத்தில்

உன்னை எழுதிய
என் கவிதைகள்
இன்னும் விதைகள் தான்
பொறுமையாக காத்திருக்கிறேன்
முளைக்கும் வரை

வானில்
நடமாடும்
நட்சத்திரமா நீ
திடீரென
மறைந்து விடுகிறாய்

சக்கரை நோய் போல
கூடிக் குறைந்தாலும்
நிரந்தரமாகவே
இருக்கிறது
உன் நினைவு


என் நினைவுகள்
உன் தூக்கத்தை கெடுத்தால்
என் கவிதைகளை படி
அதில் உன் நினைவுகள் மட்டுமே
இருக்கின்றன

உன் தலையணைக்கு
பக்கத்தில்
ஓர் இடம் தா
என் கவிதை புத்தகமும்
உன்னோடு தூங்கட்டும்

காதல்
என்னுள் பாசமாக
உன்னுள் வேசமாக
என்னுள் நேசமாக
உன்னுள் ?...........


ஏ. எச். எம். றிழ்வான்



கவிதைக்குள் ஒழிந்த கவிதை


கவிதைக்குள் ஒழிந்த கவிதை


என்
சுழற்சியும்
சுற்றுகையும்
உன்னை
முற்றுகையிடத்தான்

உன்
பார்வைகளால் தான்
என்
கவிதைகள்
வேர் விடுகின்றன

உன்னை பிடிக்கும்
தூண்டில் இறையாக
வீசப்படுகின்றன
என் கவிதைகள்
ஒவ்வொன்றும்

காற்று வீசுகிறேன்
வியர்க்கிறது
அவை நீ
சுவாசித்தவை
என்பதால்

குடிசையை
எரிக்கும் என்று தெரிந்தும்
தொங்கவிடப்படுகிறது
விளக்கு
ஓலைக்குடிசையில்

என்
கவிதைகளுக்குள்ளாய்
எட்டிப்பார்க்கிறாய் இன்னும்
அழகாகிறது என்
கவிதைகள்

ஏ. எச். எம். றிழ்வான்

உன் நினைவுகள்

உன் நினைவுகள்

உன் கண்
அசைவுகள் தான்
சாவி கொடுக்கின்றன
என் பேனைகளுக்கு
உன்னைப் பற்றி
கவி எழுத

என் கண்கள்
உன் நினைவுகளை
சேகரிக்கும் நூலகங்கள்
என் கவிதைகள்
உன்னை வாசிக்கும்
உதடுகள்

நிஜமாகவே
என்னை
கட்டியணைக்கிறாய்
உன் நிழல்கள்
என் மேல்
விழும்போது

பாகாகிக்
கொண்டிருக்கும்
என் 
கவிதைகள்
பழுதாகும் முன்
அருந்திச் செல்

இரவு நேரமானதும்
உன்னைப் பற்றி எழுதிய
கவிதைகளை வாசிக்கிறேன்
கட்டியணைத்த படி
என்னோடு
தூங்குகிறாய் நீ

குயில்களிடம்
வாடகைக்கு வாங்கிய
சொற்கள் தான்
உன்னை பற்றி
எழுதிய
என் கவிதைகள்

வண்ணத்துப்
பூச்சிகளிடமிருந்து தான்
வண்ணம் பெறுகிறேன்
என் மதுக்கிண்ணம்
உன்னை
வரைய

என்
கவிதைகள்
ஒரு தேன் கிண்ணம்
உன் நினைவுகளை
பக்குவப்படுத்தி
வைத்திருப்பத்தால்

ஏ. எச். எம். றிழ்வான்

புரியாத புதிர் நீ...


புரியாத புதிர் நீ...


அனுமதி தா
என் கவிதைப்
புத்தகத்துக்கு
உன் பெயரை
வைக்கிறேன்

குகை வாசிகள் போல்
தூக்கம் வேண்டும்
கனவில் இனிமையாக
நீ
முத்தமிடுவதால்

உன்
பார்வைகள் தான்
என்
கவிதைகளுக்கு
மோட்சம்

என் கவிதைகள்
போதை
தருகின்றன
அதில் நீ மட்டுமே
கலந்திருப்பதனால்

பறவைகளோடும்
பேசுவேன் - என்
கவிதைகளின்
அர்த்தம் உனக்கு
புரியும் போது

கல் நெஞ்சக்காரியே
உன் நெஞ்சினிலே
இடம் கொடு
கவிச்சிற்பங்களை
செதுக்குகிறேன்

புதிரே
உனக்கு மட்டும்
ஏன் புரிவதில்லை
என் கவிதைகளின்
அர்த்தம்

எனக்கு
வியர்க்க வேண்டும்
அவசரமாக என்
போர்வைக்குள்
வா

திசை தெரியாது
தவிக்கிறேன்
என்னை
காற்றாய்
கரை சேர்

ஏ. எச். எம். றிழ்வான்

புல்லாங்குழலின் சிரிப்பு

புல்லாங்குழலின் சிரிப்பு


நதிகளை போலவே
என் கவிதைளும்
நம் காதலை
எழுத எழுத
புதிதாகின்றன

பூக்களையும்
பறவைகளையும் அதிகம்
புகைப்படம் எடுக்கிறேன்
உன்னைப் பற்றி
கவி எழுத


என் இதயம் நீ என்பதால்
உன்னைப் பற்றி
கவி எழுதும் போது - என்
நாடிகளும் நாளங்களும்
சற்று ஓய்வெடுக்கின்றன

புதிர்ப் பாதையூடாக
பயணிக்கிறேன்
உன் இதயத்தை
நெருங்கும் பாதையை
அறியாது


உன்னைப் பற்றி
எழுதிய கவிதைகளை படி
நான் கண்ட
கனவுகளை
நீயும் காண்பாய்

வளையாத மூங்கிலில்
துளையிட்ட பின்
புல்லாங் குழல்கள்
வேதனை மறந்து சிரிக்கின்றன
என்னைப் போல்

ஏ. எச். எம். றிழ்வான்

பூவே இதழ்களால் உதிர்

பூவே இதழ்களால் உதிர்


டார்வின் தந்த

பட்டானிக்கடலையுடன்
காத்திருக்கிறேன்
உனக்கு என் மேல்
காதல் வருமானால்
கூர்ப்புக் கொள்கையை
உண்மை என நம்ப

என் இதயத்தில்

பலமாக
ஒரு ஆணி அடித்து
உன் நினைவுகளை
மாட்டி வைத்திருக்கிறேன்
கலன்று விடாமல்
பார்த்துக் கொள்

காந்தியைப் போல்

அரை நிர்வாணமாக இருக்கிறது
என் கவிதை
உன்னிடம்
அகிம்சை மனமிருந்தால்
காதல் ஆடை
போர்த்து

நொடிகள் தான்

உன்னைக் காண்கிறேன்
புன்னகைகிறேன்,பேசுகிறேன்
ஆனால்
என் கவிதைகள்
அதிக நேரம்
உன்னோடு பேசுகின்றன

ஈரமான

உன் உதடுகள்
காயுமுன் சொல்லி விடு
உன் காதலை
நான்
அதை தொட்டுத்தான்
கவிதை எழுதவேண்டும்


ஏ. எச். எம். றிழ்வான்

என் மனத்தின் ரணம்

என் மனத்தின் ரணம்

கற்களை
கற்கண்டாய் கரையவைக்கும் எறும்பாய்
சொற்களை கோர்க்கிறேன்
காதலுடன்
உன் மனமும் கரையுமென்று

ராக்கனாக்களை
தூக்கணாங்  குருவிக்கூடாய் அழகாக்கிய நீ
வேர்க்க நான்  காதல் சொன்னதும்
கூடாய்
நிலைக்காமல் போனது ஏன்

அச்சமின்றி உயிரை 
துச்சமென நினைத்து
நச்சுப் பாம்புகளுடன்
வாழ்பவன் உடல் போல்
மறத்துப் போயிருக்கிறது என் இதயம்


சத்தம் போட்டு
கத்தி அழுதுவிட்டு தூங்கும்
தத்தி நடக்கும்
குழந்தையாய் - இன்று
அமைதியாய் என் மனம்

படும் போது தான்
தொடும் போது
சுடும் என்றறியும்
குழந்தையின் விரலாய்
வெந்திருக்கிறது என் இதயம்

தேனாய் இனிப்பாய் என்று
நானாய் நினைத்து
வீணாய் ஆசை வளர்த்து
உன்னால்
ஏமார்ந்தவன் நான்

கவலை மறந்து
குவலய இலையில் நின்று கத்தும்
தவளையாய் - உன் 
நினைவுகளோடு பிரியவேண்டும்
என் உயிர்

ஏ. எச். எம். றிழ்வான்

காதலை பிரசவி


காதலை பிரசவி

சுடர் ஏற்றாமல்
ஒளிரும்
மின் மினி போலவே
என் கவிதைகளும்
நீ
காதல் சொல்லாமலே
துளிர் விடுகிறது
என்னில்

காலை நேரமானால்

என்
படுக்கையறையில்
பட்டாம் பூச்சிகள்
நிரம்பி விடுகின்றன
உன்னைப் பற்றி
எழுதிய கவிதைகளை
படிக்க வேண்டுமாம்

உன்னால்

காதலில்
கைதியான
என்னை
விடுவிக்குமாறு
மனு எழுதுகிறேன்
என்
கவிதைகளால்

செருப்புக்

கடைக்காரன்
முன்னேரினான்
நாள் தோரும்
நான்
உன் பின்னே
வீணாய்
அலைந்ததனால்

உனக்காக

கையை
வெட்டிக் கொண்டவன் நான்
இப்போது உணர்கிறேன்
இரத்தத்தை தானம்
செய்திருந்தால்
வாழ்ந்திருக்கும்
ஒரு உயிர்

உன் 

பார்வைகளைப் பற்றி
கேட்கவேண்டும்
என்னோடு
கதைக்க நேரமில்லாது
சென்றுவிடுகிறது
அவசரத்தில் 
மின்னல்


என்னை

கவர்ந்த
பனித்துளியும்
நீ தான்
என்னைக்
கவிழ்த்திய
பனிக்கட்டியும்
நீ தான்

உன்னை

கருக்கட்டிய
என்
கவிதைகளைப்
பார்த்தாவது
உன் 
காதலை
பிரசவி

ஏ. எச். எம். றிழ்வான்

இனியவளே...

இனியவளே...


பட்டாம் பூச்சிகளையும்
வண்டுகளையும்
சங்கிலியிட்டுக்
கட்டி வைத்திருக்கிறேன்
அவை உன்னைப் பற்றி
அடிக்கடி முணுமுணுப்பதனால்

கடலோரமாய் தன் போல்
காதல் சோடிகளை
பார்க்க வந்த கரையை
அழைத்துச் செல்ல முடியாது
தவிக்கிறது
அலை

உன் கோபத்தால்
என் தோப்புக்கு
வேலியமைத்திருக்கிறேன்
இப்போது வண்டுகளும் வருவதில்லை
எனக்கு சொந்தமான பூக்களில்
தேன் குடிக்க

மேகக் காகிதங்களை தேடிப்பிடித்து
தூரிகை கொண்டு
வானவில் தொட்டு
உன் பெயரை மட்டுமே எழுதினேன்
கானாமல் போய்விட்டது
வானவில்

என் உயிரை
எடுத்துக்கொள் பகரமாய்
ஒவ்வொரு நாளும்
ஒரு தேனீர் கரண்டி
முத்தம் தா
பருகிக்கொள்கிறேன்

நீ
ஒவ்வொரு நாளும்
அழகாகி
என்
கவிதைகளை
அழகாக்குகிறாய்

உன்னைப்
பற்றித்தான்
கவிதை எழுதுகிறேன்
உன் மூச்சுக் காற்றின்
உஷ்ணத்தால் ஒரு
தேனீர் கொண்டுவா

ஏ. எச். எம். றிழ்வான்