பூவே இதழ்களால் உதிர்
டார்வின் தந்த
பட்டானிக்கடலையுடன்
காத்திருக்கிறேன்
உனக்கு என் மேல்
காதல் வருமானால்
கூர்ப்புக் கொள்கையை
உண்மை என நம்ப
என் இதயத்தில்
பலமாக
ஒரு ஆணி அடித்து
உன் நினைவுகளை
மாட்டி வைத்திருக்கிறேன்
கலன்று விடாமல்
பார்த்துக் கொள்
காந்தியைப் போல்
அரை நிர்வாணமாக இருக்கிறது
என் கவிதை
உன்னிடம்
அகிம்சை மனமிருந்தால்
காதல் ஆடை
போர்த்து
நொடிகள் தான்
உன்னைக் காண்கிறேன்
புன்னகைகிறேன்,பேசுகிறேன்
ஆனால்
என் கவிதைகள்
அதிக நேரம்
உன்னோடு பேசுகின்றன
ஈரமான
உன் உதடுகள்
காயுமுன் சொல்லி விடு
உன் காதலை
நான்
அதை தொட்டுத்தான்
கவிதை எழுதவேண்டும்
ஏ. எச். எம். றிழ்வான்