கவிதைக்குள் ஒழிந்த கவிதை
என்
சுழற்சியும்
சுற்றுகையும்
உன்னை
முற்றுகையிடத்தான்
உன்
பார்வைகளால் தான்
என்
கவிதைகள்
வேர் விடுகின்றன
உன்னை பிடிக்கும்
தூண்டில் இறையாக
வீசப்படுகின்றன
என் கவிதைகள்
ஒவ்வொன்றும்
காற்று வீசுகிறேன்
வியர்க்கிறது
அவை நீ
சுவாசித்தவை
என்பதால்
குடிசையை
எரிக்கும் என்று தெரிந்தும்
தொங்கவிடப்படுகிறது
விளக்கு
ஓலைக்குடிசையில்
என்
கவிதைகளுக்குள்ளாய்
எட்டிப்பார்க்கிறாய் இன்னும்
அழகாகிறது என்
கவிதைகள்
ஏ. எச். எம். றிழ்வான்
