இனியவளே...
பட்டாம் பூச்சிகளையும்
வண்டுகளையும்
சங்கிலியிட்டுக்
கட்டி வைத்திருக்கிறேன்
அவை உன்னைப் பற்றி
அடிக்கடி முணுமுணுப்பதனால்
கடலோரமாய் தன் போல்
காதல் சோடிகளை
பார்க்க வந்த கரையை
அழைத்துச் செல்ல முடியாது
தவிக்கிறது
அலை
உன் கோபத்தால்
என் தோப்புக்கு
வேலியமைத்திருக்கிறேன்
இப்போது வண்டுகளும் வருவதில்லை
எனக்கு சொந்தமான பூக்களில்
தேன் குடிக்க
மேகக் காகிதங்களை தேடிப்பிடித்து
தூரிகை கொண்டு
வானவில் தொட்டு
உன் பெயரை மட்டுமே எழுதினேன்
கானாமல் போய்விட்டது
வானவில்
என் உயிரை
எடுத்துக்கொள் பகரமாய்
ஒவ்வொரு நாளும்
ஒரு தேனீர் கரண்டி
முத்தம் தா
பருகிக்கொள்கிறேன்
நீ
ஒவ்வொரு நாளும்
அழகாகி
என்
கவிதைகளை
அழகாக்குகிறாய்
உன்னைப்
பற்றித்தான்
கவிதை எழுதுகிறேன்
உன் மூச்சுக் காற்றின்
உஷ்ணத்தால் ஒரு
தேனீர் கொண்டுவா
ஏ. எச். எம். றிழ்வான்