15.4.15

உன்னுள் என் காதல்

உன்னுள் என் காதல்

வாடகை
செலுத்தாமலே
குடியிருக்கிறாய்
நீ
என் இதயத்தில்

உன்னை எழுதிய
என் கவிதைகள்
இன்னும் விதைகள் தான்
பொறுமையாக காத்திருக்கிறேன்
முளைக்கும் வரை

வானில்
நடமாடும்
நட்சத்திரமா நீ
திடீரென
மறைந்து விடுகிறாய்

சக்கரை நோய் போல
கூடிக் குறைந்தாலும்
நிரந்தரமாகவே
இருக்கிறது
உன் நினைவு


என் நினைவுகள்
உன் தூக்கத்தை கெடுத்தால்
என் கவிதைகளை படி
அதில் உன் நினைவுகள் மட்டுமே
இருக்கின்றன

உன் தலையணைக்கு
பக்கத்தில்
ஓர் இடம் தா
என் கவிதை புத்தகமும்
உன்னோடு தூங்கட்டும்

காதல்
என்னுள் பாசமாக
உன்னுள் வேசமாக
என்னுள் நேசமாக
உன்னுள் ?...........


ஏ. எச். எம். றிழ்வான்