காதலை பிரசவி
ஒளிரும்
மின் மினி போலவே
என் கவிதைகளும்
நீ
காதல் சொல்லாமலே
துளிர் விடுகிறது
என்னில்
காலை நேரமானால்
என்
படுக்கையறையில்
பட்டாம் பூச்சிகள்
நிரம்பி விடுகின்றன
உன்னைப் பற்றி
எழுதிய கவிதைகளை
படிக்க வேண்டுமாம்
உன்னால்
காதலில்
கைதியான
என்னை
விடுவிக்குமாறு
மனு எழுதுகிறேன்
என்
கவிதைகளால்
செருப்புக்
கடைக்காரன்
முன்னேரினான்
நாள் தோரும்
நான்
உன் பின்னே
வீணாய்
அலைந்ததனால்
உனக்காக
கையை
வெட்டிக் கொண்டவன் நான்
இப்போது உணர்கிறேன்
இரத்தத்தை தானம்
செய்திருந்தால்
வாழ்ந்திருக்கும்
ஒரு உயிர்
உன்
பார்வைகளைப் பற்றி
கேட்கவேண்டும்
என்னோடு
கதைக்க நேரமில்லாது
சென்றுவிடுகிறது
அவசரத்தில்
மின்னல்
என்னை
கவர்ந்த
பனித்துளியும்
நீ தான்
என்னைக்
கவிழ்த்திய
பனிக்கட்டியும்
நீ தான்
உன்னை
கருக்கட்டிய
என்
கவிதைகளைப்
பார்த்தாவது
உன்
காதலை
பிரசவி
ஏ. எச். எம். றிழ்வான்