புரியாத புதிர் நீ...
அனுமதி தா
என் கவிதைப்
புத்தகத்துக்கு
உன் பெயரை
வைக்கிறேன்
குகை வாசிகள் போல்
தூக்கம் வேண்டும்
கனவில் இனிமையாக
நீ
முத்தமிடுவதால்
உன்
பார்வைகள் தான்
என்
கவிதைகளுக்கு
மோட்சம்
என் கவிதைகள்
போதை
தருகின்றன
அதில் நீ மட்டுமே
கலந்திருப்பதனால்
பறவைகளோடும்
பேசுவேன் - என்
கவிதைகளின்
அர்த்தம் உனக்கு
புரியும் போது
கல் நெஞ்சக்காரியே
உன் நெஞ்சினிலே
இடம் கொடு
கவிச்சிற்பங்களை
செதுக்குகிறேன்
புதிரே
உனக்கு மட்டும்
ஏன் புரிவதில்லை
என் கவிதைகளின்
அர்த்தம்
எனக்கு
வியர்க்க வேண்டும்
அவசரமாக என்
போர்வைக்குள்
வா
திசை தெரியாது
தவிக்கிறேன்
என்னை
காற்றாய்
கரை சேர்
ஏ. எச். எம். றிழ்வான்