என் விழியின் வலி
உன் மேல்
என் பார்வைகள்
பட்டதால்
என் கண்கள்
கண்ணீர்
சொட்டுகின்றன
கண்களால்
வரையப்பட்ட
உன்
விம்பத்தை
கண்ணீர் கொண்டு
அழிக்க வைக்கிறாய்
தண்ணீருக்கு
பஞ்சமாகும்
வரட்சியான
தருணங்களிலும்
என் கண்ணீருக்கு மட்டும்
பஞ்சமில்லை
விரல்கள் கிழியும் வரை
வாசிக்கப்படும் வயலின் போல்
கண்ணீர்த் துளிகள்
சொட்டும் வரை
எழுதப்படுகின்றன
என் கவிதைகள்
உன் காதல்
வலி தந்த
கண்ணீர்த்துளிகளை
பார்க்க வேண்டுமா
என் கவிதைகளை
படி
உன் காதல்
நிஜமானால்
நான்
சேகரித்துவைத்த
மயிலிறகுகளும்
முளைத்து விடும்
தூக்குக் கயிறு , ஆழ்கடல்
மலையுச்சி
நச்சு போத்தல்
துப்பாக்கி ரவை இவற்றோடு
எப்போது பேசும்
உன் மௌனம்
ஏ. எச். எம். றிழ்வான்