13.4.15

காத்திருந்தாலே காதல் சுகம் ...



காத்திருந்தாலே காதல் சுகம் ...

எம் காதல்
பூப்போல்
பூத்தது
புன்னகையோடு

சிட்டாய்
சிறகடிக்கிறது – என் மனத்தில்
சில்மிஷக்காரி – உன்
சிரிப்பு

உன்
நினைவுகளால்
நீடிக்கிறது 
நித்தம் என் ஆயுள்

முடித்துவைத்து – உன்
முத்தங்கள்
மொத்தம் வேண்டும்
எனக்கு

என் இதயம்
வேகமாய் துடிக்கிறது
உன் நினைவுகள் தந்த
அதிர்வுகளால்

நான் தேடும் போதெல்லாம்
ஓடி வருகிறாய் - நீ
என் நீடித்த
துயர் நீக்க

தீக்குச்சியாய் - நீ
தீண்டும் போது
தீப்பிடிக்குதடி
என் மேனி

குழந்தையாய் - உன்
குறும்புகள்
குடிகொண்டன யாவும்
என் நெஞ்சில்

காத்திருந்தால் தான்
காதல் சுகம்
காத்திருப்போம் நாம்
கைப்பிடிக்கும் காலம் வரை

@ ஏ.எச்.எம் றிழ்வான்