காத்திருந்தாலே காதல் சுகம் ...
எம் காதல்
பூப்போல்
பூத்தது
புன்னகையோடு
சிட்டாய்
சிறகடிக்கிறது
– என் மனத்தில்
சில்மிஷக்காரி
– உன்
சிரிப்பு
உன்
நினைவுகளால்
நீடிக்கிறது
நித்தம்
என் ஆயுள்
முடித்துவைத்து
– உன்
முத்தங்கள்
மொத்தம்
வேண்டும்
எனக்கு
என் இதயம்
வேகமாய்
துடிக்கிறது
உன்
நினைவுகள் தந்த
அதிர்வுகளால்
நான்
தேடும் போதெல்லாம்
ஓடி
வருகிறாய் - நீ
என்
நீடித்த
துயர்
நீக்க
தீக்குச்சியாய்
- நீ
தீண்டும்
போது
தீப்பிடிக்குதடி
என் மேனி
குழந்தையாய்
- உன்
குறும்புகள்
குடிகொண்டன
யாவும்
என்
நெஞ்சில்
காத்திருந்தால்
தான்
காதல்
சுகம்
காத்திருப்போம்
நாம்
கைப்பிடிக்கும்
காலம் வரை
@ ஏ.எச்.எம் றிழ்வான்