13.4.15

உன் மௌனம் ....

உன் மௌனம் ....

துடிக்கும் இதயத்தில் இடம் 
பிடித்தவளுக்காய் தமிழை 
வடித்து எழுதிய 
என் கவிதை 

குளிர் காலத் 
தளிர் மேலே
வெளிர் பனி உன்
முகப்பருக்கள் 

நெஞ்சம் கவர்ந்த
மஞ்சல் முகத்தில்
அஞ்சல் பெட்டி நிற 
உதடுகள் 

சத்தம் இன்றி
சுத்தித் திரியும் 
நத்தையாய் உன் 
பாதங்கள் 

அன்ன நிறத்து 
கன்னத்திலே வண்டு
வண்ண 
மச்சம் 

கரும்பை தேடும்
எறும்பாய் நான் 
விரும்பும் உன்னை 
நோக்கிய என் பார்வைகள் 

நேசிக்கும் உன் 
சுவாசத்தை 
யாசிக்கும் என்னை
தண்டிக்கும் உன் மௌனம்

ஏ. எச். எம். றிழ்வான்