13.4.15

கண்ணீர்த் துளியானேன் ....

கண்ணீர்த் துளியானேன் ....

என்
சோகங்களை 
சுகங்களாக்கிய – நீ
இன்று 
நிஜங்களை 
நிழல்களாக்கியது ஏன்?


நீ 
என்னைப் பிரிந்த பின் 
தூக்கத்தையே அதிகம் விரும்புகிறேன் 
கனவிலாவது உன்னோடு
இனிமையாக 
வாழ வேண்டும் என்பதற்காய் 


என் 
தூய காதலை
புரிந்து கொண்டது
கண்கள் மட்டும் தான் 
பிரிந்த பின்பும்
அழுது கொண்டே இருக்கிறது


அருகருகே இருந்தும் 
தண்டவாளங்கள் கூட
காதலிக்க மறுக்கின்றன
ஒவ்வொரு நாளும் 
தன்மேல் இறந்து கிடக்கும்
காதலர்களைப் பார்த்து 


நிசப்த இரவுகளில் 
சந்திரன் பனிப்பூக்களைத் தூவ
கடற்கரையோர மெத்தையிலே
சாய்ந்திருந்து காதலித்த 
அந்த நாட்கள் 
நீங்காத நினைவுகளாய்


காதலிக்க முன்
தண்ணீர்த் துளியாய் இருந்த நான்
உன்னைக் காதலித்த பின் 
பன்னீர்த் துளியானேன் 
இன்று நீயோ என்னைப் பிரிய நான்
கண்ணீர்த் துளியானேன் 


V. vr;. vk;. wpo;thd;