நீயும் என் நினைவுகளும் ....
விழிகள் எனும்
உளிகள் கொண்டு உன்னை
செதுக்கியதால்-என்
இதயமும் ஒரு
சித்திரக்குன்றம் தான்
தாள் தாளாய் எழுதி
நூல் நூலாய் கோர்த்து
யாழ் தேவியின் பெட்டிகள் போல்
அடுக்கி வைத்திருக்கின்றேன்
உன்னைப் பற்றி எழுதிய -என்
கவிதைப் புத்தகங்களை
அடிக்கடி உன் நினைவுகள்
புதுப்பிக்கப்படுகின்றன
துறை முகங்களில்
தங்கிச் செல்லும்
கப்பல்கள் போல்
நீ பிரிந்த பின்பு
வரட்சியால்
வெடித்துப் பிளவுற்ற
பூமி போலவே இருக்கிறது
என் இதயம்
மீண்டும் இணைய முடியாமல்
காணாமல் போனவிமானத்தின்
கறுப்புப்பெட்டி போல்
பரிசோதிக்கிறேன்
என் இதயத்தை
நீ என்னை விட்டுச்செல்ல
காரணம் என்னவென்று
வேரினூடே நீர் உறிஞ்சும்
தென்னை போல
எட்டா உயரத்தில் நீயும்
உன்னில் என் நினைவுகளும்
ஏ. எச். எம். றிழ்வான்