உன் பிஞ்சுப் பாதங்களில்
பஞ்சு விரல்கள்
உன் பிஞ்சு மேனியின்
பஞ்ச வர்ணங்கள்
உன் பிஞ்சு இதழின் விசமற்ற
நஞ்சுத் துளிகள்
உன் பிஞ்சுக் கூந்தலின்
வஞ்சிக்கொடிகள்
உன் பிஞ்சுக் கன்னங்களில் - நான்
கொஞ்சும் சில நொடிகள்
உன்னை மெல்ல நெருங்கும் போது
தூரப் போகும் சிட்டுக்குருவிக்
கொளுசொலிக் கால்கள்
விட்டு விலகும் போது
என்னைத் தேடிச் சுழலும்
உன் இரு விழிகள்
பார்க்க மாட்டாயோ என ஏங்குகையில்
தலையில் யாரோ குற்றியது போல்
கடைசி நொடியில் பார்க்கும்
குளிர்ந்த, வளைந்த வானவில் போன்ற
புருவம் தூக்கி
எனைப் பார்க்கும் பார்வை
என் கண்களாகிய
ஜன்னல் ஊடாய் நுழைந்து
என் இதய அரை
கதவு திறந்து அனுமதியின்றி
உள்ளே செல்வதால்
நான் சில நொடிகள்
மௌனித்து எனை மறந்து
கனவுலகில் மிதந்து போகிறேன்
உயிரான என்னவளே...
ஏ.எச்.எம் றிழ்வான்