13.4.15

என் உயிரே...!

என் உயிரே...!
மெல் இதழ்களும்
மெழுகுக் கன்னங்களும்
மைதீட்டிய கண்ணின்
மயக்கும் பார்வைகளும் - தாக்குதடி

வெட்கச் சிரிப்பு

வெகுளித் தனம்
வெள்ளித் தோடிட்ட காதுகள்
வெண் பற்கள் - ஈர்க்குதடி

எழில் கூந்தல்

எரிக்கும் கோபம்
எட்டா நிலா அழகு
எழில் முகம் - பிடிக்குதடி

விண் மீன் விழிகள்

விண் மழைமேக புருவம்
மரகதக் கையின்
மருதாணிச் சிவப்பு - மயக்குதடி

இளஞ் சிவப்பு

இதழ்களில்
இனிமையாக முத்தமிட
இதயம் மெல்லத் - துடிக்குதடி

கனவுகளைத் தந்துவிட்டு

களைந்து சென்றாயடி - என்
கற்பனைகள் சிறகொடிந்து
கண்ணீர் உற்றாய் - சிந்துதடி
ஏ. எச். எம். றிழ்வான்