நான் நானாக இருக்கிறேன் ..
சுமை தாங்க முடியாத
ஊமைக் காதலில் - என்
இமை சிந்திய கண்ணீரை
மையாக்கி எழுதுகிறேன்
சத்தமில்லாமல்
ரத்தமில்லாமல் நடக்கிறது
யுத்தம் என்னுள் - உன்
முத்தங்களை நினைக்கும் போது
தெரியாமல் தொடங்கிய – யாரும்
அறியாமல் வளர்ந்து இன்று
பிரிந்து கிடக்கிறது
புரியாத புதிராய் என் காதல்
முடித்து வைத்த உன் நினைவுகள்
வெடித்துச் சிதறிய பின்
துடிக்க முடியாதென்று வேகமாகவே
அடிக்கிறது என் இதயம்
கூடி வாழவென்று
நாடி வந்த என்னில்
தேளாய் கொட்டி
வேலாய் ஏன் பாய்ந்தாய்
கனாக்களிலே வந்து – பல
வினாக்களை என்னில் தொடுத்து
காணாமல் போனவள் நீ - இனி
நானாகவே இருக்கிறேன் நான்
ஏ. எச். எம். றிழ்வான்