வெந்து போன என் மனசு ...
தோப்பினிலே
பூப் பறிக்கும்
பூப்படைந்த பூ உன்னை
யாப்பறிந்து
பாப்புனைந்தேன்
வெள்ளை நிறத்து
முல்லை மலரிலே
கறுப்பு நிறத்தில்
ஒரு வண்டாய் - உன்
கண்கள்
சாலையோர
சோலையிலே
பறித்து வைத்த ரோஜாவாய்
சிரிக்கிறது - உன்
இதழ்கள்
நித்தம் நான் உன்னும்
ஈத்தம் பழத்தோடு
ரவை கொண்டு
சுவையாக செய்த லட்டாய் - உன்
கன்னம்
சாத்திரக் காரனாக்கி - என்னை
காத்திருக்க வைத்திருக்கிறது நான்
பிடித்துவிடத்
துடிக்கின்ற - உன்
கைகள்
வத்திக் குச்சியால்
பத்தவைத்த ஜோதி போல்
துளிர் விட்டு
ஒளிர்கிறது - உன்
கம்மல்
நித்திரை கெடுக்கும் - உன்
மாத்திரைக் கண்கள் மேல்
சித்திரை நிலவின் பாதி
முத்திரையாய் - உன்
நெற்றி
பஞ்சமில்லா புன்னகையை
வஞ்சமில்லாது
நெஞ்சுதிர்த்த நீ இன்றதில்
கஞ்சம் செய்து என்னை
கொல்கிறாய்
அந்தர் வந்தால்
சந்து வீட்டில் தொங்கும்
லந்தரில் பட்ட பூச்சாக
வெந்திருக்கிறது - உன்னால்
என் மனசு
ஏ. எச். எம். றிழ்வான்