14.4.15

வெந்து போன என் மனசு ...

வெந்து போன என் மனசு ...

தோப்பினிலே
பூப் பறிக்கும்
பூப்படைந்த பூ உன்னை
யாப்பறிந்து
பாப்புனைந்தேன்

வெள்ளை நிறத்து
முல்லை மலரிலே
கறுப்பு நிறத்தில்
ஒரு வண்டாய் - உன்
கண்கள்

சாலையோர
சோலையிலே
பறித்து வைத்த ரோஜாவாய்
சிரிக்கிறது - உன்
இதழ்கள்

நித்தம் நான் உன்னும்
ஈத்தம் பழத்தோடு
ரவை கொண்டு
சுவையாக செய்த லட்டாய் - உன்
கன்னம்

சாத்திரக் காரனாக்கி - என்னை
காத்திருக்க வைத்திருக்கிறது நான்
பிடித்துவிடத்
துடிக்கின்ற - உன் 
கைகள்


வத்திக் குச்சியால்
பத்தவைத்த ஜோதி போல்
துளிர் விட்டு
ஒளிர்கிறது - உன் 
கம்மல்

நித்திரை கெடுக்கும் - உன்
மாத்திரைக் கண்கள் மேல்
சித்திரை நிலவின் பாதி
முத்திரையாய் - உன்
நெற்றி

பஞ்சமில்லா புன்னகையை
வஞ்சமில்லாது
நெஞ்சுதிர்த்த நீ இன்றதில்
கஞ்சம் செய்து என்னை
கொல்கிறாய்

அந்தர் வந்தால்
சந்து வீட்டில் தொங்கும்
லந்தரில் பட்ட பூச்சாக
வெந்திருக்கிறது - உன்னால்
என் மனசு

ஏ. எச். எம். றிழ்வான்