என் உள்ளத்தில் முள் தைத்தவள் நீ
தள்ளித் தள்ளி சென்றாலும்
மெல்ல மெல்லமாய் என் மனதை
கிள்ளி எடுத்த
கள்ளி நீ
உள்ளத்திலே
கள்ளம் கொண்டு
குள்ளமாய் நீ பழகி
இல்லை இனி காதல் என்றாய்
வில்லத்தனத்தை
உள்ளே வைத்து
கல்லான உன் மனதால்
தொல்லை கொடுத்தவள் நீ
ஒல்லியான உன்னிடத்தில்
தள்ளியே நிற்கின்றேன்-என் காதலுக்கு
புள்ளி வைத்து உயிரோடு
கொள்ளி வைத்ததனால்
பள்ளம் பாயும்
வெள்ளத்தில் ஓடும்
வள்ளமாய்-இன்று என்
உள்ளம்
ஏ. எச். எம். றிழ்வான்