14.4.15

என் கல்லறையின் கிறுக்கல் ...


என் கல்லறையின் கிறுக்கல் ...

செத்தல் மிளகாய்
இதழ்களிலே
நச்சுத்தடவியா
முத்தமிட்டாய்


மென் கம்பி
விரல்களிலே
மின் தடவியா-என்னை
தொட்டாய்


துப்பாக்கி ரவை
கண்களாலே
ஏனடி நீ என்னை
சுட்டாய்


நச்சுத் திரவியமா-நீ
என் மீது சிந்திய
பொய்யான 
புன்னகைகள்


கத்திக் கண்களால்
குத்திக் கிழித்தாய்
என்னில்-உன்
நினைவுகளை


என்னைக் கொள்ளும்
ஆயுதங்களை வைத்திருக்கும்
களஞ்சியமா நீயும்-உன்
இதயமும்


காதல் கைதியாய்
சிறைப்பிடித்து
மரணதண்டணை நீ விதித்து
உயிரோடு ஏன் புதைத்தாய்


ஏ. எச். எம். றிழ்வான்