என் கல்லறையின் கிறுக்கல் ...
செத்தல் மிளகாய்
இதழ்களிலே
நச்சுத்தடவியா
முத்தமிட்டாய்
மென் கம்பி
விரல்களிலே
மின் தடவியா-என்னை
தொட்டாய்
துப்பாக்கி ரவை
கண்களாலே
ஏனடி நீ என்னை
சுட்டாய்
நச்சுத் திரவியமா-நீ
என் மீது சிந்திய
பொய்யான
புன்னகைகள்
கத்திக் கண்களால்
குத்திக் கிழித்தாய்
என்னில்-உன்
நினைவுகளை
என்னைக் கொள்ளும்
ஆயுதங்களை வைத்திருக்கும்
களஞ்சியமா நீயும்-உன்
இதயமும்
காதல் கைதியாய்
சிறைப்பிடித்து
மரணதண்டணை நீ விதித்து
உயிரோடு ஏன் புதைத்தாய்
ஏ. எச். எம். றிழ்வான்